நானும்
கடவுளும்
குற்றவாளிக் கூண்டில்.
வழக்கு தொடர்ந்தது.
எனக்கு நானே வாதிட்டேன்
என் குற்றங்களை
ஒப்புக் கொண்டேன்
அதற்காக
மன்னிப்பு கேட்டேன் கூசாமல்.
அ...... சத்தியமாக
திருந்தி நடப்பேன் - என்றேன்.
அதனால்
என்னை மன்னித்து
எனக்கு
விடுதலை.
பாவம் கடவுள்
கடவுள் மீது குற்றங்கள்
அடுக்கடுக்காய்
உன் படைப்பில்
ஒருவனை ஒருவன் வெட்டுகிறான்
ஒருவனை ஒருவன் சுரண்டுகின்றான்.
இதுவா - உன் படைப்பு
மனிதனிடம்
“மனிதம்” எங்கே?
குற்றப்பட்டியல் நீள்கின்றது.
கடவுள் - தன்
குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை
இனிமேல்
மனிதனை - மனிதனாக
படைப்பேன் - என
உறுதி கூறவும் இல்லை
இதனால்
கடவுளுக்கு
ஆயுள் தண்டனை |