பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
 
முறுகல் .
சொற்பதம்
.
.
இருபடி
பனிதுயில் புல்நுனி
மனிதனை அளக்கும்

பொய்வலை விரிப்பின்
மெய் பல மடியும்

மீன் எறி தூண்டிலின்
தீன் சுவை கொடிது

நெல்பல பொலிய
நல்லவை இயலும்

பகை தணி வாழ்க்கை
தகை மிகு சேர்க்கை

ஈரம் கூர
வேரும் ஊரும்

அடங்கிய மனசு
புடம்படும் இனிது

புனை புகழ் மகிழான்
தனை அவன் இகழான்

வறுமை சிறுமை
வலிமை களையும்

நல்லோர் நாடிச்
செல்வார் வெல்வர்

கடன் படான் வாழ்வில்
கவலைக் கிடம் கொடான்

தீயுறு மெழுகாம்
தாயுறு துயரம்

தன் சொல் உணர்ந்தார்
மேனி பொன் புனைந்தார்

சிறையழி புதுப்புனல்
நிறையளி செய்யும்

நலம் பெறு சுடர்நுதல்
நலம் பெறத் துலங்கும்

வெண்ணெய்த் தண்மை
உண்மைப் பெண்மை

துஞ்சு மனை கெடு
நஞ்சுக் கிருப்பிடம்

ஞாயிறு கதிரொளி
நீயிர் மறைப்பிரோ!

தன்னை அளந்தவன்
பொன்னில் உயர்ந்தவன்

தன்சொல் உணரின்
இன்சொல் வளரும்

ஒழுகு மதியார்
பழக விதியார்

தேனூர் வாழ்க்கை
திண் திறல் யாக்கை

மையல் நெஞ்சம்
ஐயம் தீரா

நல்லார் நாடிச்
செல்வார் வதுவை

கன்னி விடியல்
கவிதைக் குவியல்

சூதார் செயினும்
சாதனை இழப்பர்

விரிமலர்த் தாது
வண்டுக்குத் தூது

மீன்பிடி நாரை
தான் படும் தீர்வை

பசு மலர் வண்டுப்
பாரம் சுமக்கும்

குழவிக் கூறு முலையால்
கிளவிக் கூறு கவியால்

  <--முதல் பக்கம்    
அடுத்த பக்கம்-->
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.